தோழர்களே 1967
க்கு பின CPI மற்றும் CPI(M) தத்துவார்த்த நடைமுறையை எதிர்த்து பல தோழர்கள் நக்சல்பாரி
இயகக்ங்களில் செல்வதும் அதெநேரத்தில் கட்சிக்குள் இருந்து கட்சியின் நிலைபாட்டை விமர்சிப்பவர்களை
தமிழகத்தில் ரவுடி தேவரத்தின் கூலிபடையிடம் காட்டி கொடுத்து பல கொடுமைக்கு உட்படித்திய
வரலாறு உண்டு.
இப்படி தன் இயக்கத்தை
தத்துவார்த்த ரீதியாக கட்டிகாக்க முடியாத பாராளுமன்ற பாதம் தாங்கிகளான போலிகள், பதவி
போதையில் மக்களை மறந்ததுடன் மார்க்சியத்தையும் திரித்து முதலாளித்துவ பாணியில் வளர்ந்து
கொண்டுள்ளனர்.... தொடர்வோம் நட்புடன் தோழர்களே.....சி.பி
CPI, CPM
(போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ வரையறையில்
தோழர்களே
நான் இந்த பதிவை நிறுத்தி வைக்கும் எண்ணத்துடன் எழுதியபோது சில தோழர்கள் உண்மை வரலாற்றை
எழுதுவதில் தவறில்லை என்றனர் அதெயிடத்தில் ஒரு சி.பி.எம் தோழர் “சி.பி.எம் தோன்றுவதற்க்கு
முன்னர் வரலாறு” என்கிறார், ஒரு சி.பி.அய் தோழர் என் மீது கோவப்பட்டு எழுதுகிறார்.
இவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக எனது எல்லா பதிவுகளையும் ஒன்றாக பதிவிடுகின்றேன்
அதனுடன் காங்கிரஸ் கயவாளிகளுக்கு சளைதவர்கள் அல்ல இந்த வரலாற்று திரிப்புவாதிகள்.
தோழர்களே
நான் whatchat groupல் சில நேரம் வாசிக்கும் போது பல தோழர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதுவதை
கண்டு கோவப்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாதா நிலை அதனால் வரலாற்று அடிப்படையில் இதனை
விளக்க நினைத்து இதனை எழுதுகிறேன்:-
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி வரலாறு தெரியாத தோழர்கள் கட்சி ஆவணங்களை வாசிக்கவும், ஆசிரியர் அருணன் மற்றும்
பல ஆசிரியர்கள் எழுதியுள்ள பல பதிவுகளில் உள்ளன, வரலாற்று ஆவணங்களை வாசித்து தங்கள்
ஆளுமையை சரிபடுத்தி கொள்ளவும் (இவை CPI, CPM தோழர்களுக்கு) (மா-லெ தோழர்கள் சுனிதி
குமார் கோசின் நக்சல்பாரி முன்பும் பின்பும் சரியான வரலாற்று ஆவணம் ஆங்கிலேய அரசின்
ஒடுக்குமுறையில் இருந்து மா-லெ இயக்கங்களின் இன்றைய நிலைவரை விளக்கியுள்ளார், பல செய்திகளை
CPI மற்றும் CPM ஆவணங்கள் சுட்டிகாட்டாத நிகழ்வுகளை இதில் காணலாம்). 1952 முன் இ.க.க
தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. குருச்சேவின் வழிகாட்டுதலில் மார்க்சிய
லெனின்ய பாதையை கைவிட்டு அஜாய்கோஸ் அவர்களின் அறிக்கை குருச்சேவின் திருத்தல்வாதத்தை
ஆதரித்து சந்தர்ப்பவாத பாதையை தேர்ந்தெடுத்து வெல்லபட முடியாத தெலுங்கான புரட்சியை
காட்டி கொடுத்தது. CPI மைய மற்றும் மாநில குழுவின் சார்ப்பாக அக்டோபர் 23, 1951ல் அன்று
ஏ.கே கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்” தெழுங்கான போர் நேரு அரசை தூக்கி எறிய அல்ல
கொடுங்கோன்மை நிலப்பிரபுத்துவக் எதிராக” என்று நேரு அரசின் முன் சரண் அடைந்தது, நேரு
அரசின் 60 ஆயிரம் இராணுவத்தினர் செய்யமுடியாத செயலை இவர்களின் கடிதம் மண்டியிட வைத்தது.
கடுமையான அடக்கு முறைக்கு ஆளான இ.க.க புரட்சி பாதையை விட்டு அமைதி வழி பாராளுமன்ற பாதையான
திருத்தல்வாத பாதையை கடைபிடித்து மக்களுக்கு துரோகம் இழைத்தது.(1920 ல் உருவான இ.க.க
சர்வதேச கம்யூனிச சித்தாந்தம் அடிப்படையில் இயங்கிய கட்சி இதனை விரிவாக காணலாம் பின்னர்).
1960 மார்ச்
30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்க்குப் பதிலளித்து
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் “ஜீன் 14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமை இயக்கத்தின் பொதுவழி
பற்றிய முன்வரைவு” என்ற கடிதமும் உலக கம்யூனிஸ்ட்
இயக்கத்தின் பிளவுக்கு காரணமாயிற்று. இந்த ஆவணங்கள்தான் மாபெரும் விவாத ஆவணங்கள் என்றழைக்கபடுகின்றன.
1957ல் கேரள
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகண்ட இ.க.க. NDF, UDF என்ற உத்தியில் கங்கிரசின் பாணியில்
பாராளுமன்ற பாதையை உயர்வானதாக தேர்ந்தெடுத்து கொண்டது. இதில் கங்கிரசுடன் கூட்டனி அமைப்பதா
கூடாதா? என்ற கருத்து வேறுபாட்டில் உறுவானதே இ.க.க(மா) (1964 ல்), இரண்டு கட்சிகளும்
புரட்சி பாதையை கைவிட்டு சீர்திருத்தவாதம், வர்க்க கூட்டு, ஆளூம் வர்க்கத்திடம் சரணாகதி
இவைகளை முதண்மைபடுதி வந்துள்ளன.
CPI(M) மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968 ல் நடைபெற
உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளி போட்டது, ஆனல் CPI போல் CPI(M) மும்
அமைதிவழி மாற்றம், ஆயுதப் புரட்சி அல்ல! நிலத்திற்க்கான போராட்டம், அதிகாரத்திற்க்கான
போராட்டம் அல்ல! என்ற நிலைப்பாட்டைதான் எடுத்தது. இத்தகைய நிலையில்தான் CPI(M) ன் திரிப்புவாத
நிலைபாட்டை எதிர்த்தும் வர்க்க சமரசப் பாதையை எதிர்த்தும் கட்சிக்குள் கிளர்ச்சி செய்தனர்.
CPI(ML) உருவாக்கம்
Cpi(m) கட்சிக்குள்
போராடிய புரட்சியாளர்கள் நவீன திரிப்புவாதத்திற்கு எதிராகவும், அக்கட்சி வர்க்கப் போராட்டத்திற்க்கு
இழைத்த துரோகத்திற்க்கு எதிராகவும் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டுவதற்க்குப் போராடினார்கள்.
அவ்வாறு போராடிய புரட்சியாளர்கள் பல குழுக்களாக இருந்து போராடினார்கள். புரட்சிகரப்
போராட்டத்தை தொடரும் விதமாக 1967 தேர்தலைப் புறக்கணிக்குமாறு புரட்சியாளர்கள் அறைகூவல்
விட்டனர், ஆனால் CPI(M) ஓடுகாலியான CPI யுடனும் பிற பிற்போக்கு முதலாளித்துவக் கட்சியுடனும்
காங்கிரசை தோற்க்கடிப்பது என்று அய்க்கிய முன்னனி கட்டிவெற்றி பெற்ற கையோடு கிசான்
சபாவின் (தன் அமைப்பான) கோரிக்கையான நில சீர்திருத்த கொள்கையைகூட நடைமுறைபடுத்த மறுத்துவிட்டன.
7வது காங்கிரசிற்க்கு
பிறகு CPI(M) கட்சிக்குள்ளேயே இருந்த பொதுவுடைமைப் புரட்சியாளர்கள் CPI(M) துரோகத்திற்க்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினர்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் மற்றும் பிற மிகவும் முக்கியமான மக்கள் பிரச்சினைகளை
கைவிட்டன, பாராளுமன்ற பாதையை சட்டவாத அடிப்படையில் அனுகி கட்சியை சீரழிவு பாதையில்
எடுத்து சென்றனர்,
Published
on 30/06/2016
CPI, CPM (போலி கம்யூனிஸ்ட்டுகள் ஏன்)? மா-லெ
வரையறையில் நேற்றைய தொடர்ச்சி...CPI மற்றும் CPI(M) யின் திருத்தல்வாதங்களை பற்றி பார்த்தோம். அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி நந்தா CPI(M) புரட்சிபாதையில் பயணித்து விட்டது ஆம் வன்முறைபாதையை தேர்ந்தெடுத்துவிட்டது என்று
கூரிய வார்த்தையை சரிகட்ட கட்சியின் பொதுசெயலர் சுந்தரய்யா நந்தாவை சந்திக்க டெல்லி அனுப்பிவைக்கப் பட்டார், CPI(M) தாங்கள் ஆயுதப் போராட்டம் எதுவும் சிந்தித்துகூடப் பார்க்கவில்லை என்றும் “சட்டரீதியாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவதுடன்” மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற முழக்கத்தை மட்டுமே வைத்திருப்பதாகவும் விளக்கி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களை மயக்குவதற்க்கு பேசப்பட்ட வீரவசனங்கள் புதுடெல்லியில் உள்ள எஜமானர்களின் முன்பு வெறும் முனகல்களாக மாறின !
கம்யூனிசம் என்பது
துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வும்
மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக
பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு,
ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்ட்தாய் இருக்கிறது.
பாவ புண்ணிய்க் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முட்ங்கி விடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடைகளைக் கண்டடைவதா?
அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்சியமே வேறில்லை- தோழர் பாரதிநாதனின் கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் அடிகோலில் இருந்து.
நாளை தொடர்வேன்.....
CPI, CPI(M) தோழர்கள் பதில் தெரிவிக்காமையால் நீண்ட பதிவிடாமல் சிறிதாகவே பதிவிட்டுள்ளேன். இத்தொடர் இந்திய மா-லெ இயக்க வரலாற்றுடன் தனித்து செயல்படும் குழுக்கள் அவை முன் வைக்கும் கோட்பாடுகள் எல்லாம் தெரிவிப்பேன். முயற்சிக்கிறேன் சரியான உண்மையான நிகழ்வுகளை பதிவிட தவறை சுட்டி காட்டலாம்... தோழமையுடன் தொடருவோம்...
No comments:
Post a Comment